புற்று நோய்க்கு புது மருந்து.
புற்று நோய்க்கு புது மருந்தொன்று ,இலவசமாய் வழங்கபடுகிறதாம். எனது மெயில் பாக்சை திறக்கும்போதெல்லாம், வந்து விழுகின்றன புதிது புதிதாய் இ- மெயில்கள் - வியாழகிழமை உலக புற்று நோய் தினமென்று. என்னதான் இருக்கிறதென்று பல வலை பக்கங்களை வலம் வந்து பார்த்தால், பெப்ரவரி- 4 , உலக புற்று நோய் தினமென்று கண்டேன். இருந்தும் என்ன! மெயிலில் வந்த தகவல் பயனுள்ளது என்பதால் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
இரத்த புற்று நோய்க்கு 'Imitinef Mercilet' என்றொரு மருந்து இலவசமாய் அடையார் புற்று நோய் மருத்துவமனையில் வழங்கபடுகிறதாம். அது இரத்த புற்று நோயை சுத்தமாய் துடைத்திடுதாம். 1954 இல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில், அனைத்து புற்று நோய்களுக்கும் நல் மருத்துவ சிகிச்சைகள் வழங்கபடுகிறதாம்.புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. இரத்த புற்று அதில் ஒரு வகை.
அடையாறு மட்டுமல்ல, மேலும் பல மருத்துவமனைகளிலும் மேற்கண்ட மருந்து இலவசமாய் வழங்கப்படுகிறதாம். மருத்துவமனைகளிலே தங்கி சிகிச்சை எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்கப்படுகிறதாம்.
நான் அறிந்தவரை, எந்த ஒரு புற்று நோய்க்கும், தனி ஒரு மருந்தில் முழு நிவாரணம் கிடைக்கும் என்று உறுதிபட கூற இயலாது. புதிய மருந்தென்பதால், இனிதாய் சுகபடுத்தட்டும். இறைவனை வேண்டுவோம், இன்னல்கள் தீர.
புகை இல்லா புகையிலை பயன்பாடு அதிகரித்து வருவது ஆபத்துகள் பலவற்றை அழைத்து வரும். தவிர்ப்போம் புகையிலை பயன்பாடு.
Read more: http://www.unavuulagam.in/2010/10/blog-post_13.html#ixzz3MQvTsDJm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக